தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பலாலியில் வைத்து வரவேற்றார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்திற்காக வேட்பாளரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி அவர்கள் யாழ்.தேவி புகையிரத சேவையினை காங்கேசன்துறை வரையான சேவையினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் நிலையான தேசம் தொடரும் முன்னேற்றம் வடக்கின் வளர்ச்சி பற்றிய எதிர்கால கண்ணோட்டம் தொடர்பில் துறைசார்ந்த நிபுணர்களுடனான கலந்துரையாடலிலும் கலந்து கொண்டு விசேட உரையாற்றவுள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம் நடைபெறவுள்ள மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்திலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கவுள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டங்களுக்காக பெருந்திரளான மக்கள் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகைதந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.