Ad Widget

தேர்தல் சுவரொட்டி ஒட்டிய பூசகர் கைது

வல்வெட்டித்துறை, கெருடாவில் பகுதியில் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய பூசகர் ஒருவரை வியாழக்கிழமை (23) இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்சி ஒன்றின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஒரு தொகை சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts