Ad Widget

தேடப்படுகிறார் என்ற தலைப்புடன் நகரப் பகுதிகளில் சுவரொட்டிகள்

wantedதேடப்படுகிறார்’ என்ற தலைப்புடன் தெய்வீகன் அல்லது பகீரதன் என்ற நபர் குறித்து தகவல் வழங்குமாறு கோரி அவருடைய படத்துடன் யாழ்.நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் அந்த நபருடைய புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நல்லூர், கல்வியங்காடு, திருநெல்வேலி, முடமாவடிப் பகுதிகளிலேயே இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த துண்டுப்பிரசுரங்களில் தெய்வீகன் அல்லது பகீரதன் என்றும் நபர் அதிகளவான குற்றங்களுடன் தொடர்புடையவர், குறித்த நபர் தொடர்பான சரியான தகவல் தருபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் தொடர்பான தகவலைத் தெரிவிப்பதற்கு கொழும்பு மாவட்ட தொலைபேசி இலக்கம் ஒன்றும், கைத்தொலைபேசி இலக்கம் ஒன்று அத்துண்டுப்பிரசுரத்தில் எழுதப்பட்டுள்ளது.

அத்துடன் தேடப்படும் நபருடைய கடந்த 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts