Ad Widget

தெஹிவளை பகுதியில் உள்ளவர்களுக்கான பதிவு உடன் நிறுத்தப்படும் – அமைச்சர் மனோ

தெஹிவளை பொலிஸ் வலயத்தில் குடியிருப்பாளர் பதிவை உடன் நிறுத்த நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் கிரிஷாந்தவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இனிமேல் அங்கு பதிவு நடவடிக்கைகள் நடைபெறாது. சிங்களத்திலோ, தமிழிலோ எந்த மொழியில் படிவங்கள் வந்தாலும் படிவங்களை எந்த மொழியிலும் நிரப்பி கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை மீறி பொலிஸ் அதிகாரிகள் உங்கள் இருப்பிடங்களுக்கு வருவார்களாயின், 077312770 என்ற இலக்கத்துக்கு குறும்செய்தி அனுப்பி, விவரத்துடன் தன்னிடம் புகார் செய்யுமாறும் அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts