Ad Widget

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றி வந்த 35 சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த 35 சுகாதார தொண்டர்கள் 2014 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் ஒப்பந்த கால அடிப்படையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

எனினும் அவர்களது ஒப்பந்த காலம் நேற்றுடன் முடிவடைந்தமையால் அவர்களை வேறு வேலை பார்க்குமாறு கூறப்பட்டுள்ளது.

இதனாலேயே அவர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக ஒப்பந்த கால அடிப்படையில் அவர்களை சுகாதார தொண்டர்களாக உள்வாங்குவதற்கு முன்னர் அவர்கள் நீண்டகாலமாக கிராமமட்ட சுகாதார தொண்டர்களாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts