Ad Widget

தென்மராட்சியில் 15 டெங்கு நோயாளிகள்

maleriya-mosquto-denkuதென்மராட்சிப் பகுதியில் இம்மாதம் 2ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிவரை அடையாளம் காணப்பட்ட 15 டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், தென்னிலங்கைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை கொழும்புக்குச் சென்று அழைத்து வந்தவர்களே டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts