Ad Widget

கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவருக்கு பிணை!

release_allதுப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அல்லாரை தெற்கு, கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கியைக் காட்டி நகைகள் உட்பட ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரினால் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இம்மூவரில் இருவர் தொடர்பான பிணை மனு யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வேளை, மேற்படி வழக்கினை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் எஸ்.பரமராஜா அவ்விருவருக்கும் பிணை வழங்கினார்.

Related Posts