Ad Widget

திஸ்ஸ விகாரை விவகாரம்: யாழில் போராட்டம்!

தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த விகாரைக்கு அருகே போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ”வடக்கில் தமிழர்களின் காணியை அபகரித்து இராணுவத்தினரால் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ் சாட்டிய போராட்டக்காரர்கள் குறித்த விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தியிருந்தனர்

Related Posts