Ad Widget

திரையரங்குகளை ஜூன் 27 முதல் மீளத் திறக்க அனுமதி!!

நாடுமுழுவதுமுள்ள திரையரங்குகளை ஜூன் 27ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 20ஆம் திகதி கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து திரையரங்குகள் அனைத்தும் 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி திரையரங்குகளை வரும் ஜூன் 27ஆம் திகதி மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts