Ad Widget

திருமண வீட்டில் நகைகள் பணம் களவு!

திருமண வீட்டில் இரவு வேளை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 37 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் ரொக்க பணமும் களவாடி சென்றுள்ளனர்.. யாழ். புன்னாலைக் கட்டுவான் வடக்கில் வசிக்கும் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை குறித்த வீட்டில் திருமண வைபவம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு வீட்டில் இருந்தோர் வீட்டின் கதவுகளை பாதுகாப்பாக மூடாது நித்திரைக்கு சென்றுள்ளனர்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய திருடர் வீட்டினுள் நுழைந்து 37 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் வீட்டுக்காரர் கண்விழித்துப் பார்த்தபோதே திருடர் திருடியமை தெரியவந்தது.

இதனையடுத்து உடனே காவல்துறையிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, மோப்ப நாயின் உதவியுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

Related Posts