Ad Widget

திருகோணமலை மாவட்டத்திலுள்ள புத்தர் சிலைகளை பாதுகாக்க விசேட நடவடிக்கை

திருகோணமலைப் பிரதேசத்திலுள்ள புத்தர் சிலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பிரணாந்துவின் தåலைமையில் நேற்று (08) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் அப்பிரதேசத்திலுள்ள விகாரைகளின் பிக்குகளும் கலந்துகொண்டுள்ளனர்.

திட்டமிட்ட குழுவொன்றினால், திருகோணமலை மாவட்டத்தின் 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் நேற்று அதிகாலை உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts