Ad Widget

திருகோணமலையில் மினி சூறாவளி

திருகோணமலை தம்பலாகமம் பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்பலாகமம் கோயிலடியில் சுமார் 30 நிமிடங்கள் வீசிய சுழல் காற்றினால் வீடுகளின் கூரைகள் 300 மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதேவேளை கிண்ணியா பிரதேசத்தில் நேற்று பிற்பகல் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளதுடன் இதன் காரணமாக ஐந்து வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

கிண்ணியா, காக்காமுனை, மேல் திடல் மற்றும் கச்சக் கொட்டித்தீவு ஆகிய பகுதிகளிலேயே இத்தகைய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts