Ad Widget

தியாகி திலீபன் நினைவஞ்சலியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

தியாகதீபம் திலீபனின் அஞ்சலி வணக்க நிகழ்வுகள் யாழ்ப்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தநிலையில் இறுதிநாள் நிகழ்வு இன்றைய தினம் யாழப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

mavai-theleepan

இதே வேளை கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி தலைவர் சுப்ரமணியம் சுரேந்திரன் தலைமையில், கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகியோர் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு, யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்கள் மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்காக ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து திலீபனின் நினைவுதினத்தையொட்டி இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவுவாரத்தின் இறுதிநாள் நிகழ்வான நாளை, வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் விசேட அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts