மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத மூவர் கொண்ட குழு வாளினால் வெட்டியதில் திசைகாட்டி நிறுவனத்தின் நிர்வாகி எஸ்.சுபசீலன் (வயது 42) படுகாய மடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
நேற்று இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலேயே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த ஒரு நபரினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்து சுபசீலனால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.