Ad Widget

தாமரைப்பூ பறிக்கச்சென்ற வயோதிபர் பலி

dead-footதாமரைப்பூ பறிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் தாமரைக் கொடி சுற்றிப் பலியாகியுள்ளார். இருபாலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தினைச் சேர்ந்த வீரகத்திபிள்ளை சோதிவர்மன் (வயது 57) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

இவர் கோவில்களுக்கு தாமரைப்பூ பறித்து கொடுப்பவர் என்றும், தாமரைப்பூ பறித்து கொடுப்பதற்கான ஓடர் கிடைத்தவுடன், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் இருபாலை கேணிக்குளத்திற்கு தாமரைப்பூ பறிக்கச் சென்றுள்ளார்.

அதன் பின்பு தாமரைப்பூ பெற்றுக்கொள்வதற்காக ஆட்கள் வந்துள்ளதாக மனைவி பெறாமகனை அழைத்து வருமாறு கூறி கேணிக்குளத்திற்கு அனுப்பியபோது, பெறாமகன் பெரிய தகப்பன் நீரில் மிதப்பதை கண்டு அயலில் இருந்தவர்களிடம் கூறிய போது, அயலவர்களினால், சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ் சம்பவம் தொடர்பான விசாரணையினை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts