Ad Widget

தாதியர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பு

hospital_newbuldingயாழ்.போதனாவைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் தமது சம்பள உயர்வு மற்றும் பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டனர். இலங்கை தாதியர் சங்கத் தின் ஏற்பாட்டில் நேற்று முற்பகல் யாழ். போதனாவைத்திய சாலையின் புதிய நான்கு மாடிக் கட்டடத்திற்கு முன்பாக ஒன்று கூடியே அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எனினும் யாழ். போதனாவைத்தியசாலையின் அத்தியாவசிய சேவைகள் பாதிக்காதவகையில் அவர்களின் பணிப்புறக்கணிப்பு அமைந்திருந்ததுடன் போராட்டம் பிற்பகல்வரை நீடித்தது. சம்பள உயர்வு, மேலதிக நேரவேலைக் கொடுப்பனவுப்படிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தியே இந்தப்பணிப்புறக்கணிப்பை அவர்கள் மேற்கொண்டனர்.

Related Posts