Ad Widget

தளபாடம் விற்க வந்தவர்கள் தனிமைப்படுத்தலில்!!

மொரட்டுவ பகுதியில் இருந்து சாவகச்சேரி பகுதிக்கு தளபாட விற்பனைக்காக வந்த 10 பேர் சாவகச்சேரி சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ பகுதியில் இருந்து மூன்று வாகனங்களில் தளபாடங்களுடன் வந்த 10 பேர் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி நின்று , கிராமங்களுக்குள் கால் நடையாக சென்று தளபாட விற்பனைகளை மேற்கொள்ள தயாராக இருந்துள்ளனர்.

இது தொடர்பில் சாவகச்சேரி சுகாதார பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த வீட்டுக்கு சென்ற சுகாதார பிரிவினர் , வீட்டில் இருந்த 10 பேரையும் அதே வீட்டில் சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

அதேவேளை , தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு , வீடுகளுக்கு பொருட்கள் விற்க வருவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் , அது தொடர்பில் மக்கள் சுகாதார பிரிவினருக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.

Related Posts