Ad Widget

தமிழ் பொலிஸ் சார்ஜன்ட் அடித்துக்கொலை!!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வவுணதீவில் உள்ள அரசி ஆலைக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் சார்ஜன்டான தம்பாப்பிள்ளை சிவராசா (வயது-55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக நேற்றிரவு சென்ற நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த வவுணதீவு பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

Related Posts