தமிழறிஞரும் மூத்த ஆசிரியருமான ம.கங்காதரம் அவர்களின் “தமிழ் எழுத்துக்கள் நேற்று – இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 19.04.2015 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் த.சிறீஸ்கந்தராசா வரவேற்பரை நிகழ்த்துகிறார்.
முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன் அவர்கள் நூலாசிரியர் ம.கங்காதரம் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்குவதையம் அருகே இந்நூலாகக்த்திற்கு உறுதுணையாக இருந்த பா.துவாரகன் மற்றும் த. ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் காணப்படுகின்றனர்.
யாழ் பல்கலைக்கழக மொழியியல் துறை சிரேட்ட விரிவுரையாளர் கலாநிதி சுபதினி ரமேஷ் அவர்கள் ஆய்வுரை நிகழ்துவதை காணலாம்
நூலாசிரியர் ம.கங்காதரம் அவர்கள் ஏற்புரை வழங்குகிறார்
பொன்மனச்செம்மல் கல்விக்காருண்யன் லயன் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் முதன்மைப் பிரதி பெற்றுக் கொள்கிறார்.
ஓய்வுபெற்ற உதவித் திட்டப் பணிப்பாளர் பிரம்மஸ்ரீ இ.குமாரசுவாமிசர்மா சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்கிறார்.
கத்தோலிக்க கலை இலக்கிய வட்டத் தலைவரும் எழுத்தாளருமான யோசப் பாலா சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்கிறார்.
யாழ் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் சர்வேஸ்வரா நன்றியரை நவில்கிறார்.
நிகழ்வில் கலந்து கொண்டோர்