Ad Widget

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் மே தின நிகழ்வு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளது.

இடம்: சிவன்கோவில் திருமண மண்டபம், பருத்தித்துறை

நேரம்: பி.ப 3.00 மணிக்கு ஆரம்பம்

காலம்: 01 மே 2016 (ஞாயிற்றுக்கிழமை)

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரை கண்டறிதலை வலியுறுத்தியும், தமிழ்த் தொழிலாளர்கள், தமிழ் விவசாயிகள், தமிழ் மீனவர்கள் மீதான ஒடுக்குமுறையிலிருந்து விடுபடல், காணி அபகரிப்பை தடுத்தல், மீள் குடியேற்றத்தை வலியுறுத்துதல், இராணுவ மயமாக்கலை தடுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளை நிறுத்தல், கொடிய பயங்காரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தல் என்பவற்றிற்காக அனைத்து தமிழ் மக்களையும் இம் மேதினத்தில் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் விடுக்கப்பட்டுள்ள மேதின நிகழ்வு தொடர்பான செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts