Ad Widget

தமிழ்த்தேசம் என்கின்ற இலட்சியப் பாதையில் இருந்து நாம் விலகப்போவதில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இன்று புதன்கிழமை(19.8.2015) மதியம் யாழ்.ஊடக மையத்தில் தமிழ் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்   எமது கட்சியின் கொள்கையை ஏற்று வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியினைக் கூறிக்கொள்ளுகின்றோம். எமது கொள்கையினை முன்னெடுத்துச் செல்லும் எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும். கடந்த காலங்களில் குறிப்பாக தேர்தல் காலங்களிளல் எமது பல செயற்பாடுகளுக்கு பல்வேறு கோணங்களில் இருந்து சவால்கள் கொடுக்கப்பட்டிருந்தது. எங்களுடைய கருத்துக்கள் மக்கள் மட்டத்தில் செல்வதற்கும் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.

எங்களுடைய மக்களுக்கான அடையாளத்தினைக் கொடுக்கக்கூடிய “தமிழ்தேசியம்” தமிழ் அரசியலில் இருந்து இல்லாது போனதற்குப் பிற்பாடே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நாங்கள் உருவாக்கினோம். தமிழ் மக்களுடைய தேசியவாதம் பாதுகாக்கப்படவேண்டும். தேசியவாதத்தினை பாதுகாப்பது தீவிரவாதம் இல்லை. இன்று தமிழ்தேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது இன அழிப்பு என்பதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்துகளும் இல்லை. அந்த தமிழ்தேசத்தினை பாதுகாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் நாங்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றோம்.

இன்று அந்த செயற்பாடுகளை உரிய வகையில் மக்கள் மட்டத்தில் கொண்டு செல்வதற்கு குறைபாடுகள் இருந்தாலும், இதன நிவரத்திசெய்து மக்களுக்கு கொண்டுசென்று சேர்ப்பதன் ஊடாகத்தான் எமது பிரச்சினைக்கு தீர்வினைப் பொற்றுக்கொள்ள முடியும். இதனைப் பெற்றுக்கொள்ள எந்தனை தடைகள் வந்தாலும் அவை அத்தனையையும் தாண்டிசெல்வதே எமது பணியாக இருக்கும். இதன்படியே இனிவரும் காலங்களில் நாம் செயற்படபோகின்றோம்.

எம்மைப் பொறுத்தவரையில் 2010ஆம் ஆண்டு தேர்தலைவிட இந்த வருடம் நடைபெற்ற தேர்ததல் பல மடங்கு வளர்ந்திருக்கிறோம். இந்த வளர்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே காரணம். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் அமோக ஆதரவினைக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். அதேபோன்று எமது நிலைப்பாடு சுயநிர்ணைய அடிப்படையிலே தமிழ்தேசம் அங்கிகரிக்கப்படுகின்ற நிரந்தரதீர்வு எட்டப்பட வேண்டும். இதனை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகதெளிவாக கூறியுள்ளோம்.

அந்த தீர்வு தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி தீர்வாக அமைவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தால் அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றோம்.

எந்த விதத்திலும் எங்களுடைய தமிழ்த் தேசத்தினுடைய நலன் பாதிக்கப்படாத வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநிர்ணைய உரிமை என்னும் அடிப்படையில் தேசம் அங்கிகரிக்கப்படுகின்ற ஒரு சமஸ்டி தீர்வை எட்டுவற்கு எடுக்கின்ற எந்த ஒரு முயற்சிக்கும் எங்களுடைய ஒத்துழைப்பு இருக்கும். திம்பு கோட்பாட்டினை தாண்டிய தீர்வினையே நோக்கி நகர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளாரகள். இந்த முயற்சி நேர்மையான வழியில் முன்னெடுக்கப்பட்டால் அதற்கும் நாங்கள் ஆதரவு வழங்குவோம்.

ஜ.நா மனித உரிமை பேரவையினால் வெளியிடப்படவுள்ள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வியைங்களை தாண்டியும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்; முன்னிலையில் தமிழர்களுக்கு நடைபெற்ற இனஅழிப்பு தொடர்பாக சர்வதே விசாரணை நடைபெற வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருமாக இருந்தால் அதற்கும் எங்களுடைய ஆதரவினை நிச்சயமாக கொடுப்போம்.

நாம் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ள இரு விடையங்களும் பேரம் பேசுவதற்கு அப்பால்பட்ட விடையங்கள். இந்த நிலைப்பாடுகளோடு செயற்படுகின்ற எந்த ஒரு தரப்பிற்கு ஒத்துழைப்புதர தயாராக இருக்கின்றோம். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் எமது ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் எமது அடிப்படை கொள்கையில் இருந்து நாம் சற்றேனும் தளரப்போவதில்லை என்பதும் உறுதி. என்றார்

Related Posts