யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
முதலாவது சந்தேகநபர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞனே நேற்று குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது யாழ்.மாவட்ட பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலகசூரிய தெரிவித்துள்ளார்
குறித்த இளைஞன் நேற்று முன்தினம் இரவுவேளை துண்டுப் பிரசுரத்தினை ஓட்டியுள்ளார் எனப் தெரிவிக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் அங்கிருந்த அகற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இன்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இணுவில் பகுதியைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (24) என்ற இளைஞனும் கைது செய்ப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.