Ad Widget

தமிழர் உரிமைப் பிரச்சினைக்கு ஜனநாயகப் போராளிகள் முன் வைக்கப்போகும் தீர்வு என்ன?

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் முதலாம் திகதி சுதுமலையில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட இடமான சுதுமலையில் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியினர் தெரிவித்தனர்.

தனி நாட்டுக் கோரிக்கையுடன் ஆயுதவழியில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியை ஆரம்பித்து, சுயேச்சைக் குழு -4 இல் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பில் அவர்கள் எவ்வாறான தீர்வை தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்துவர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

எனினும் வீழ்ந்து கிடக்கும் தமிழர் பொருளாதாரத்தை உயர்த்துவதையே தங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என அவர்கள் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts