Ad Widget

தபால்மா அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

பொதியொன்றுக்கான கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை தபால் திணைக்களத்தைப் போன்று அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் போலியானவை என்று தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யு.ஆரி.பி.சத்குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், எஸ்.எல்.போஸ்ட் அல்லது ஸ்ரீலங்கா போஸ்ட் என்ற பெயர்களில் இந்த போலி குறுஞ்செய்திகள் அனுப்படுகின்றன.

எனவே இவற்றில் கடன் அட்டைகள் தொடர்பான தகவல்கள் கேட்கப்பட்டால், எவ்வித தகவல்களையும் வழங்க வேண்டாம் என்று பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

1950 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும், 011 2542104, 011 2334728, 011 2335978, 011 2687229 மற்றும் 011 2330072 என்ற இலக்கங்களுக்கும் அழைத்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Related Posts