Ad Widget

தனியார் கல்வி நிலைய மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் : இரு மாணவர்கள் படுகாயம்

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் இரு குழுவாக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில் மாணவர்கள் குழுவினராகப்பிரிந்து வகுப்பறையில் மோதிக்கொண்டனர். இதையடுத்து நேற்றிரவு 7.30மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்றிணைந்த மாணவ குழுவினர் அதே பாடசாலையில் க.பொ.த. சதாரணத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் காணப்படுவதனால் மாணவர்கள் குழுவினராக மோதிக்கொள்வது அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. இப்பகுதியில் பொலிசாரரை கடமையில் நிறுத்துவதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபோதும் இவ்வாறான சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related Posts