Ad Widget

டோனியை பதவியில் இருந்து விலகும்படி அழுத்தம் கொடுக்கவில்லை: தேர்வுக்குழு தலைவர்

மகேந்திர சிங் டோனியை அணிதலைவர் பதவியில் இருந்து விலகும்படி எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை என இந்திய சிரேஷ்ட அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ரஞ்சி கிண்ண அரையிறுதியின் போது டோனியிடம் சென்று அணிதலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தியை பிரசுரித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில் ”அணிதலைவர் பதவியில் இருந்து விலகுமாறு டோனிக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை. அது அவரது தனிப்பட்ட முடிவு. ஜார்க்கண்ட் – குஜராத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி தொடரின் அரையிறுதிப் போட்டியின் போது டோனி என்னிடம், அவரது ராஜினாமா குறித்து தகவல் தெரிவித்தார்” என கூறினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான அணிதலைவர் பதவியில் இருந்து விலகிய டோனி, கடந்த சில நாட்களுக்கு முன் ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டிக்கான அணிதலைவரட பதவியில் இருந்து விலகினார். ஆனால் அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார். இதனால் விராட் கோஹ்லி மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் அணிதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts