Ad Widget

டெங்கு ஒழிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் இளவாலை கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபட்டு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

varuhthapadath-valipar-sankam-ilaalai

கிராம மக்கள் அனைவருக்கும் ஒலிபெருக்கி மூலமாக டெங்கு நுளம்பு பெருக தக்க கழிவுப்பொருட்களை சேகரித்து பொதி செய்து வைத்துகொள்ளுமாறு முன்னதாகவே அறிவுறுத்தபட்டு, வலிவடக்கு பிரதேச சபையின் வாகனத்தின் உதவியுடன் வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்கள் வீடுகள் தோறும் சென்று அப் பொதிகளை சேகரித்தனர்.

இந்தச் செயற்றிட்டத்தை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு.சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

Related Posts