Ad Widget

டெங்கினால் சுழிபுரம் மாணவி உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். பராளை வீதியச் சேர்ந்த தர்ஷிகா (வயது 11) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூளாய் வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையிலேயே இந்த மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts