Ad Widget

டிப்பருடன் பஸ் மோதியதில் ஒருவர் பலி

முல்லைத்தீவு பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் மீது கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மோதியதில் பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்தில், சுமார் 15 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பஸ் குடைசாய்ந்தமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாங்குளம் பொலிஸார் கூறினர்.

Related Posts