ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவாநந்தாவுக்கு எதிராக பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன், சுடரொளி பத்திரிகைகளின் உரிமையாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனே இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் ஊடாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்ததற்காக செலுத்தவேண்டிய ஒன்றரை கோடி ரூபாய் கட்டணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா செலுத்தத் தவறியுள்ளதாக அவருக்கு எதிரான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக டக்ளஸ் தேவாநந்தா அவரது நிகழ்ச்சிகளை ஒலிபரப்புச் செய்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனதுமுறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.