Ad Widget

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மரணமடைந்த யோகேஸ்வரன் குடும்பத்தை தத்தெடுத்த லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தியபோது சேலத்தில் ரயிலை மறித்து சிறை பிடித்தனர். இந்த போராட்டத்தின் போது உயர் அழுத்த மின்கம்பியை பிடித்து ஏறிய சேலம் மன்னார் பாளையத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற 17 வயது இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். நேற்றுமுன்தினம் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதை கேள்விப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் சேலத்தில் உள்ள யோகேஸ்வரன் வீட்டுக்கு நேற்று சென்று யோகேஸ்வரன் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார். “யோகேஸ்வரனுக்கு பதிலாக அவரது குடும்பத்தின் மூத்த மகனாக இருந்து அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நான் செய்வேன்” என்று கூறிய லாரன்ஸ் முதல்கட்டமாக யோகேஸ்வரனின் தங்கை பிரியதர்ஷியினியின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்பதாக அறிவித்தார்.

Related Posts