Ad Widget

ஜனாதிபதி மட்டும் பயன்படுத்தும் விமானம் வேண்டாம்: ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மட்டும் பயன்படுத்தும் உத்தியோகபூர்வமான விமானம் அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithripala-sirisena

16மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இந்த விமானம் கொண்டுவரப்படவிருந்தது. இதன் இலங்கை பெறுமதி 208கோடி ரூபாவாகும்.

இதற்காக திறைச்சேரியின் ஊடாகவே பணம் செலுத்தப்படவிருந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி அந்த விமானக்கொள்வனவை நிறுத்தியதுடன் அந்த பணத்தை மக்களின் நலன்புரிகளுக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

Related Posts