Ad Widget

ஜனாதிபதி தேர்தலன்று யாழ்ப்பாணத்தில் 191 வாகனங்கள்

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாக்களிக்கும் நடவடிக்கைகளுக்கு தனியார் பஸ்கள் மற்றும் போக்குவரத்துச் சபை பேருந்துகள் என 191 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

ctb

இலங்கை போக்குவரத்துச் சபையின் 63 பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் தெரிவித்தார்.

பருத்தித்துறை சாலையிலிருந்து 10 பேருந்துகளும், காரைநகர் சாலையிலிருந்து 10 பேருந்துகளும், யாழ்ப்பாண சாலையிலிருந்து 43 பேருந்துகளும் இவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனியார் பஸ் சங்கத்திலிருந்து 128 பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாண தனியார் பஸ் சங்கத்தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார். அதாவது, யாழ்ப்பாண தனியார் பஸ் சங்கத்திலிருந்து 108 பஸ்களும், வடமராட்சி தனியார் பேருந்து சங்கத்திலிருந்து 20 பஸ்களும் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

Related Posts