ஜனாதிபதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது 69 ஆவது பிறந்த தினமான இன்றைய தினத்தில் (18) ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி சிறப்புப் பூசை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதன்பிரகாரம் ஜனாதிபதி அவர்களை வாழ்த்தியும் நல்லாசி வேண்டியும் துரைச்சாமி குருக்கள் தலைமையில் இச்சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் விசேடமாக இந்துகுருமார்கள் வேதம் ஒதி ஜனாதிபதி அவர்களுக்கு நல்லாசி வேண்டி சிறப்புப் பூசைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன் துரைச்சாமிக்குருக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து காளாஞ்சிகளையும் வழங்கி வைத்தார்.
இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஆகியோருடன் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய சிறப்புப் பூசை வழிபாடுகளில் ஜனாதிபதியின் இந்துசமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் இராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மாவும் உடனிருந்தனர்.