Ad Widget

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 285 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் இரண்டாம் ஆண்டு பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், நாடளாவிய ரீதியில் 285 கைதிகள், நேற்று காலை,விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் அடிப்படையில் யாழ் சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் நேற்று காலை யாழ் சிறைச்சாலை அத்தியட்சகர் முன்னிலையில் விடுவிக்கப்பட்டனர்.

திருகோணமலை சிறைச்சாலையின் தலைமை ஜெயிலர் முன்னிலையில் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் தலைமை ஜெயிலர் ஏ. பிரபாகரன் மற்றும் ஜெயிலர் கே.மோகன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில், கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Posts