Ad Widget

ஜனாதிபதியின் சகோதரர் மீது தாக்குதல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலால் படுகாயடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை பொலனறுவையில் இடம்பெற்றுள்ளது.

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் எனவும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை – ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்தவை தாக்கினார் எனக் கூறப்படும் லக்மால் என்பவர் பொலநறுவை பக்கமுன என்ற இடத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்தநிலையில் அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts