Ad Widget

ஜனாதிபதியின் உருவப் படத்துக்கு கழிவு ஒயில் வீச்சு!

mahintha_oilசாவகச்சேரி அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப் படத்துக்கு இனந்தெரியாத சிலர் நேற்றிரவு கழிவு ஒயில் வீசிச் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து இன்று காலை பொலிஸாரும் படையினரும் இணைந்து சேதமடைந்த படத்தை கழற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் குறித்த படம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் சிலரை படையினர் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் தெரியவருகிறது. எனினும் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

Related Posts