Ad Widget

ஜனவரி 26-ல் விக்ரமின் புதிய படம் தொடங்குகிறது!

இருமுகன் படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் சாமி-2 வில் விக்ரம் நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிங்கம்-3 வேலைகளில் ஹரி பிசியாக இருந்தார். அதனால் சிங்கம்-3 வெளியான பிறகு ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கி ஜூன் மாதம் சாமி-2 படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் ஹரி.

இந்தநியைில், தற்போது கெளதம்மேனன், வாலு விஜயசந்தர் இயக்கும் படங்களில் நடிக்க கதை கேட்டுள்ளார் விக்ரம். இந்த இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பவர், முதலில் விஜயசந்தர் இயக்கும் படத்தை தொடங்கி, பிப்ரவரியில் கெளதம்மேனனுக்கும் கால்சீட் கொடுத்துள்ளார்.

ஆக, இந்த இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்கும் விக்ரம், விஜயசந்தர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் ஜனவரி 26-ந்தேதி கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடசென்னை படத்தின் கதைக்களம் என்பதால் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இந்த படத்தில் விக்ரம் சென்னை தமிழ் பேசி நடிப்பதாகவும் கூறப்படும் நிலையில், படத்தின் இரண்டு பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்கிறார்களாம்.

இப்படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தெலுங்கு வில்லன் நடிகர் ஒருவரிடம் தற்போது கால்சீட் பேசி வருகிறார்கள்.

Related Posts