Ad Widget

சூரன்போரில் வாள் வெட்டு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ரன்போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது.

இதன்போது, ஆலயத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தர்க்கம் கைக்கலப்பாக மாறி வாள் வெட்டில் முடிவடைந்தது.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts