Ad Widget

சுழிபுரத்தில் புலிகளின் தயாரிப்பு கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருள்கள் மீட்பு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருள்கள் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் தென்பட்டுள்ளன.

சுழிபுரம் மத்தியில் உள்ள காணி ஒன்றை உரிமையாளர் நேற்று துப்புரவு செய்த போது அவை தென்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு காணி உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார், மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் மீதமுள்ள கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருள்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts