Ad Widget

சுயநினைவிழந்த நிலையில் இராவணன்!! தேடிச் சென்ற பெண்!

எல்ல வெல்­ல­வாய கரந்­த­கொல்ல பிர­தே­சத்­தி­லுள்ள இரா­வண எல்ல கற்­குகை ஒன்­றினுள் சுய­நி­னை­வி­ழந்து காணப்­ப­டு­வ­தாகக் கூறப்­படும் இரா­வ­ணனை நினைவு திரும்பச் செய்­வ­தாகத் தெரி­வித்து மொறட்­டுவ பிர­தே­சத்­தி­லுள்ள மந்­தி­ர­வாதி பெண்­ணொ­ருவர் உட்­பட 18 பேர் நேற்­று­முன்­தினம் அக்­கு­கை­யினுள் சென்­றி­ருந்த போது தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கினர்.

women-manthera-vathy-iravanaan-eravanan-girl

சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

சம்­பவ தினத்­தன்று இக்­கு­கை­யினுள் வழ­மைக்கு மாறாக ஏதா­வது ஒரு சம்­பவம் இடம்­பெ­று­வ­தாக அப்­பி­ர­தேச மக்கள் மத்­தியில் தகவல் பர­வி­ய­தை­ய­டுத்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் அங்கு குழு­மி­யி­ருந்­த­தனால் பாது­காப்­புக்­காக பொலிஸார் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர். எனினும் அவர்கள் இவ்­வாறு குகைக்குள் செல்­ல­வி­ருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு முன்­ன­றி­வித்தல் கொடுத்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இதற்கு முன்­ப­தா­கவும் இவ்­வா­றான மாந்­தீ­ரி­கர்கள் சிலர் இக்­கு­கை­யினை நோட்­ட­மிட்­டுள்­ள­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­தனர்.

இந்த மந்­தி­ர­வாதிப் பெண் தான் கண்ட கன­வி­னை­ய­டுத்து இக்­கு­ழு­வி­ன­ருடன் இங்கு வந்­தி­ருப்­ப­தா­கவும் சுய­நி­னை­வி­ழந்து குகை­யினுள் இருக்கும் இரா­வ­ணனை உன்னால் மட்­டுமே எழுப்ப முடியும் எனவும் ஏப்ரல் 10 ஆம் திக­திக்கு முன்னர் இரா­வ­ணனை எழுப்­பி­விட வேண்டும் எனவும் தனது கனவில் தோன்­றிய இறைவன் தெரி­வித்­த­தாக அப் பெண் கூறினார்.

மேலும் இப்­பெண்­ணுடன் குகைக்குள் சென்­றி­ருப்­ப­வர்கள் இரா­வணன் வம்­சத்தைச் சேர்ந்­த­வர்கள் எனவும் அதனால் அவர்களை இவ்­வாறு குகைக்குள் அழைத்துச் செல்­வ­தா­கவும் அப்பெண் தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு குகைக்குள் சென்­ற­வர்­களுள் சித்த சுவா­தீ­ன­மற்ற ஒரு­வரும் காணப்­ப­டு­வ­துடன் அவர் இரா­வணன் எல்ல பிர­தே­சத்­துக்கு அரு­கி­லுள்ள கரந்­த­கொல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரென தெரி­ய­வந்­துள்­ளது. குறித்த பெண் மொறட்­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரெ­னவும் ஏனை­ய­வர்கள் நாட்டின் வெவ்­வேறு பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள் எனவும் கூறப்படுகிறது.

இப்பெண் உள்­ளிட்ட குழு­வினர் நேற்­று­முன்­தினம் காலை 7.30 மணி­ய­ளவில் குகைக்குள் சென்­றுள்­ளனர். இச்­சந்­தர்ப்­பத்தில் பிர­தே­ச­வா­சிகள் குகைக்கு அருகில் கூடி­யி­ருந்­த­மை­யினால் அவர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு எல்ல பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

குகை­யினுள் சென்­றி­ருந்த பெண் தெரி­விக்­கையில் இரா­வணன் இக்­கு­கைக்குள் இருந்தால் அவ­ருக்கு உரிய சிகிச்­சை­ய­ளித்­து­விட்டு இன்று வரு­வ­தாகத் தெரி­வித்தார். இதே­வேளை இக்­கு­கை­யினுள் சுமார் 400 அடி பள்­ள­மொன்று காணப்­ப­டு­வ­தோடு விசா­ல­மான குள­மொன்றும் காணப்­ப­டு­வ­தாக அதற்குள் சென்ற பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­த­தோடு அதனைப் பார்­வை­யிட வரும் உல்­லாசப் பய­ணி­களிடம் தாம் பணத்தைப் பெற்­றுக்­கொண்டு அவர்­களை குகை­யினுள் அழைத்துச் செல்­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

இக்­கு­ழு­வி­னரின் பயணம் தொடர்பில் பதுளை தொல்­பொ­ரு­ளியல் ஆராய்ச்­சி­யாளர் அலு­வ­ல­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் 6.15 மணியளவில் குகையிலிருந்து வெ ளியில் வந்திருந்த மந்திரவாதி பெண் உள்ளிட்ட குழுவினர் மீது சுமார் 500 இற்கும் அதிகமான பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் குறித்த பெண் மாற்றுவழியொன்றினூடாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Related Posts