Ad Widget

சுமந்திரன் வார்த்தை ஜாலம் காட்டுகிறார் -சுரேஸ் பதிலடி

இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, தமிழ் கட்சியினர் செல்வது இல்லை. இது கடந்த 33 வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால் அதனை சுமந்திரனும் சபந்தர் ஐயாவும் உடைத்துவிட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள இதர உறுப்பினர்கள் போகவேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் அதனையும் மீறி சுமந்திரனும் சம்பந்தரும் சென்றுள்ளார்கள். இதனை நியாயப்படுத்த முற்பட்டுள்ளார் சுமந்திரன். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் MP , அவரின் மூக்கை உடைக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார். சுமந்திரன் வார்த்தை ஜாலம் காட்டுவதாகவும், படிக்காத மோடையனுக்கு இதனைப் போய் சொல்லலாம் , எமக்கு சொல்ல தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார். இதோ வீடியோ இணைப்பு !

Related Posts