Ad Widget

சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்கள் ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, தங்களின் வழக்கை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுமாறு பிரதிவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அவர்களது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, தேவை ஏற்படும் பட்சத்தில் அரச செலவில் சட்டத்தரணிகளை ஒழுங்கு செய்துதர தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts