Ad Widget

சுமந்திரனின் கருத்தை வன்மையான கண்டிக்கின்றேன் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்தை வன்மையான கண்டிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்தது ஆயுதப்போராட்டம் என குறிப்பிட்ட அவர் அயுதம் ஏந்தி போராடி இலங்கை அரசினை பணியவைத்து அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்குடனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என கூறினார்.

அப்படியான வரலாற்றுப்பின்னணியைக் கொண்ட கூட்டமைப்பில் இருந்து கொண்டு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் இப்படியான கருத்துக்களை தெரிவிக்கலாகாது என்றும் அதனை நங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த சுமந்திரன், சுதந்திரம் கிடைத்தது முதல் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை என்றும் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்காக தோற்றம் பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts