Ad Widget

சுன்னாகத்தில் இரவு நேரங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கை

PoliceCarசுன்னாகம் பொலிஸ் பிரிவில் மதுப்பிரியர்களின அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேரங்களில் பொலிஸாரின் வாகன ரோந்து நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.துஸமிந்தா தெரிவித்தார்.

இந்நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 10 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் காரணமாக திருட்டு சம்பவங்கள் கட்டுப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு இடையூறாக நடப்பவர்களும் கண்கானிக்கப்பட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Posts