Ad Widget

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. எனினும், சுகாதார நிலைமைகள் சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திரு தேஷப்பிரிய தெரிவித்தார்.

ஜுன் மாதம் 1ஆம் திகதியான நேற்று வாக்காளர் தினம் தொடர்பாகவும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு:

1980 அம் ஆண்டு இலக்க 44 வாக்காளர்களை பதிவு செய்தல் சட்டத்தின் கீழ் இலங்கையில் வாக்குரிமையாளர் ஆவதற்கு தகுதிகளைக் கொண்டவர்கள் பதிவு செய்யப்படுவார்கள். இந்த சட்டத்திற்கு அமைவாக குறிப்பிட்ட தினத்தில் 18 வயதை பூர்த்தி செய்தல், ஏதாவது ஒருமுகவரியில் பதிவை கொண்டிருத்தல், இலங்கை பிரஜைக்கான ஏனைய தகுதி நீக்கங்களுக்கு உட்படாதவராக இருந்தால் வாக்காளராக பதிவு செய்வதற்கு தகுதியுண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட திகதி ஜுன் மாதம் 1ஆம் திகதி என்பதினால் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் முதலாம் திகதி வாக்காளர்களின் தினமாக பெயரிடப்பட்டு தொடர்ச்சியாக வைபவ ரீதியாக கொண்டாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வாக்காளராவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பல்வெறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும் துரதிஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலினால் அந்த வருடத்தில் ஜுன் மாதம் 1ஆம் திகதியன்று இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு முடியாமல் போனது. இதே போன்று இந்த வருடத்தில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட ஊழுஏஐனு 19 தொற்று பரவவதை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இம்முறையும் இந்த வைபவத்தை கொண்டாடுவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முடியாமற்போனது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தி;ல் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டால் மாத்திரமே உங்களுக்கு வாக்களிப்பதற்கு உரிமை கிட்டும் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

பாராளுமன்றம் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்து

பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் பெரும்பாலானோர் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்கின்றனர். நாம் தற்பொழுது அதாவது தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி சட்டத்தரணியூடாக கௌரவ உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளோம். ஜுன் மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்ற விடயத்தை. தேர்தலை நடத்தவதற்கு பொருத்தமான தினத்தை குறிப்பிடுவதில் சட்ட ரீதியிலான தடை ஏற்படாவிட்டால் தேர்தல் ஆணைக்குழு இதற்காக வேறொரு தினத்தை குறிப்பிடும்.

சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைவாக முடிந்தவரையில் தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் விருப்பமாகும். இந்த தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைக்கும் தேவை. தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை. ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றமொன்று இடம்பெற வேண்டும் என்பது அத்தியாவசியமாகும் என்பதை ஆணைக்குழு மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றது. இதன் மூலம் நாம் இப்பொழுது மேற்கொண்டு வரும் அரசியல் யாப்பு பணிகளை அவ்வாறே மேற்கொள்ளுவோம்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்ப செயற்பாடுகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை நாம் சுகாதார பணியாளர் சபை உறுப்பினர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளோம். என்பதினால் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு கூடுதலான காலம் தேவையாகவுள்ளது. ஜுன் மாதம் 2ஆம் வாரத்தில் இறுதியளவில் 3ஆம் வாரம் மத்திய பகுதியில் இவற்றை பூர்த்தி செய் முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். சட்ட ரீதியிலான தடை ஏற்படாமல் இருந்தால் தேர்தலை நடத்தவதற்கு எம்மால் முடியும் சுகாதார வைத்திய ஆலோசனை தொடர்பில் எமக்கு கிடைத்த வழிகாட்டிகளுக்கு அமைவாக தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் . நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.. 60 தொடக்கம் 70 நாட்கள் காலப்பகுதி தேவைப்படும். எனெனில் முன்னரிலும் பார்க்க கூடுதலான

பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பதினாலாகும். இருப்பினும் பணியாளர் சபையினர் தங்கியிருந்து கடமைகளை மேற்கொள்ளக்கூடிய மணித்தியாலங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதனால் முகக்கவசத்தை அணிதல் போன்றவற்றினால் கூடுதலான காலம் தேவைப்படுகிறது. தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்தும் தேவை ஆணைக்குழவிற்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நாம் எதிர்பார்த்தோம் 650 தொடக்கம் 700 கோடி ரூபா செலவில் பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியுமென்று சுகாதார பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தல் ஏனைய சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைவாக உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டால் செலவு ஓரளவு அதிகரிக்கக்கூடும். இருப்பினும் இந்த அதிகரிக்கும் தொகையை திறைசேறி மூலம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சுகாதார நிலைமை சிறப்பாக அமைந்தால் சட்ட தடைகள் இல்லையாயின் மிக விரைவில் கூடிய விரைவாகவும் இந்த தேர்தலை நடத்துதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Posts