யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச நியமனம் வழங்காது 3 வருட காலத்துக்கு சுகாதார தொண்டர்களாக அமர்த்தப்பட்டவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி, சுகாதார தொண்டர்களாக அமர்த்தப்பட்டவர்கள் தன்னார்வ முறையில் பணியாற்றியுள்ளனர் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல. வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் கூட இந்தப்பிரச்சினை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் தாம் வேலைவாய்ப்புக்களை வழங்குகின்ற வேளை அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், ஆனால் அவர்களுக்கான கடந்த காலத்துக்கான சம்பளத்தை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.