சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து!!

தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

யாழ். நல்லூர் பிரதேச சபையில் தமிழ் அரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், தமிழ் மக்கள் கூட்டணிக்கு 6 ஆசனங்களும் கிடைத்திருந்த நிலையில், முதல் இரு வருடங்களை தமிழ் மக்கள் கூட்டணிக்கும், இறுதி இரு வருடங்களை இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் என்று ஆட்சி அதிகார ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.

Related Posts