Ad Widget

சீரியல் இயக்கத்தில் இறங்கிய சுந்தர் சி

பிரபல சினிமா இயக்குனர் சுந்தர் சி சின்னத்திரை சீரியல் ஒன்றை இயக்கி வருகிறார்.

நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. ‘முறைமாமன்’ படத்தில் தொடங்கி, ‘அரண்மனை இரண்டாம் பாகம்’ வரை 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் இயக்கியதில் ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘அருணாச்சலம்’, ‘அன்பே சிவம்’, ‘வின்னர்’, ‘கிரி’ ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன.

‘தலைநகரம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன்பின் ‘வீராப்பு’, ‘சண்டை’, ‘ஆயுதம் செய்வோம்’, ‘முரட்டுகாளை’, ‘அரண்மனை’ உள்பட 15 படங்களில் நடித்துவிட்டார். தற்போது ‘சங்கமித்ரா’ என்ற பெரிய பட்ஜெட் படத்தை 3 மொழிகளில் இயக்கவுள்ளார்.

இதற்கிடையில் அவர் சின்னத்திரைக்காக ஒரு சீரியல் இயக்கிவருகிறார். ‘நந்தினி’ என்ற பெயரில் இயக்கி வருகிறார். இது வருகிற 22ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Related Posts