யாழிலிருந்து காலிவரையான கரையோரங்களில் கடலலையின் வேகம் அதிகரித்திருக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
ஆகையினால் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்வோரும் கரையோரங்களை அண்மித்திருப்பவர்களும் அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிலையம் எச்சரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் தற்போது தோன்றியுள்ள சீரற்ற காலநிலையின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடித்திருக்கும் என்றும் அந்நிலையம் எதிர்வுகூறியுள்ளது.